Paristamil Navigation Paristamil advert login

கால்பந்து உலக கிண்ணம் - முதல் நாளில் வெற்றி பெற்ற மெக்சிகோ, தென் கொரியா

கால்பந்து உலக கிண்ணம் - முதல் நாளில் வெற்றி பெற்ற மெக்சிகோ, தென் கொரியா

12 ஆனி 2026 வெள்ளி 14:06 | பார்வைகள் : 188


48 நாடுகள் பங்குபெறும் பிபா உலகக்கிண்ண கால்பந்து தொடர், மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடைபெறுகிறது.

நேற்று மெக்சிகோ நாட்டின் மெக்சிகோ நகரில் தொடக்க விழாவுடன் கோலாகலமாக தொடங்கியது.

முதல் போட்டியில் A பிரிவில் உள்ள மெக்சிகோ மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதியது.

ஆட்டம் தொடங்கிய 9வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ஜுலியன் அண்ட்ரே குவானிஸ் முதல் கோல் அடிக்க, 67வது நிமிடத்தில் மற்றொரு மெக்சிகோ வீரர் ரவுல் ஜெமிஸ் மற்றொரு கோல் அடித்தார்.

தென் ஆப்பிரிக்க வீரர்கள் கோல் அடிக்க முயற்சித்தாலும், அதனை மெக்சிகோ வீரர்கள் வெற்றிகரமாக தடுத்தனர்.

இதன் மூலம், மெக்சிகோ அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மெக்சிகோ வீரர் ஜுலியன் அண்ட்ரே முதல் கோலை அடித்தன் மூலம், கால்பந்து உலகக்கிண்ண வரலாற்றில் தொடக்க கோலை அடித்த முதல் கான்காகாப் (CONCACAF) பிராந்திய நாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஸாடோபன் நகரில் நடந்த தென் கொரியா மற்றும் செக் குடியரசுக்கு இடையேயான 2வது போட்டியில், முதல் பாதியில் எந்த வீரரும் கோல் அடிக்காத நிலையில், ஆட்டத்தின் 2ஆம் பாதில் செக் குடியரசின் லாடிஸ்லாவ் க்ரெஜ்ஸி 59வது நிமிடத்தில் கோல் அடித்து கோல் கணக்கை தொடங்கினார்.  

67வது நிமிடத்தில் தென் கொரிய வீரர் ஹ்வாங் இன்போம் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார்.  

80வது நிமிடத்தில் ஓ ஹியான் கியூ ஒரு கோல் அடிக்க 2-1 என்ற கணக்கில் தென் கொரியா வெற்றி பெற்றது.