Paristamil Navigation Paristamil advert login

தொடர் பாலியல் குற்றவாளிகளுக்குஆயுள் தண்டனை வரை — செபஸ்தியோன் லூகோர்னுவின் புதிய முன்மொழிவு!

தொடர் பாலியல் குற்றவாளிகளுக்குஆயுள் தண்டனை வரை — செபஸ்தியோன் லூகோர்னுவின் புதிய முன்மொழிவு!

9 ஆனி 2026 செவ்வாய் 19:28 | பார்வைகள் : 1000


சிறுமி Lyhanna (11 வயது) கொலைக்குப் பிறகு நாடு முழுவதும் எழுந்த அதிருப்தியைத் தொடர்ந்து,  பிரதமர் செபஸ்தியோன் லூகோர்னு செவ்வாய்க்கிழமை பல அமைச்சர்களுடன் கூட்டம் நடத்தினார்.

அதில் அவர் முன்மொழிந்த முக்கிய நடவடிக்கை:

=தொடர் பாலியல் குற்றவாளிகளுக்கு (violeurs en série) தற்போதைய 20 ஆண்டுக்கு பதிலாக ஆயுள் தண்டனை (perpétuité) வழங்கும் சட்ட மாற்றம்
இதைபிரதமரகம் ( Matignon) உறுதிப்படுத்தியுள்ளது.

குழந்தைகள் மீதான குற்றங்களில் — விசாரணை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்.

 

Media

லூகோர்னு மேலும்,

குழந்தைகள் மீதான குற்றங்களில், அனைத்து விசாரணை நடவடிக்கைகளும் அதிகபட்சம் 3 மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்

இந்த நடவடிக்கை, Lyhanna வழக்கில் முக்கிய சந்தேக நபர் மீது:

பல புகார்கள்

பல எச்சரிக்கைகள்

இருந்தும் நீதித்துறை செயல்படாதது என்ற விமர்சனத்துக்கு பதிலாக அமைந்துள்ளது.

புதிய குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தில் சேர்க்கப்படும்.

இன்னும் சில நடவடிக்கைகள் இறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன

இவை அனைத்தும் குழந்தைகள் பாதுகாப்பு சட்ட முன்மொழிவில் சேர்க்கப்படும்.

இந்த சட்டம் ஏற்கனவே 10 நாட்களுக்கு முன் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஜூலை மாதத்தில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும்

எனவும் பிரதமர்  தெரிவித்துள்ளார்.