Paristamil Navigation Paristamil advert login

இரவு விடுதியில் மோதல் - கேப்டன் பதவியை இழக்கும் பென் ஸ்டோக்ஸ்?

இரவு விடுதியில் மோதல் - கேப்டன் பதவியை இழக்கும் பென் ஸ்டோக்ஸ்?

9 ஆனி 2026 செவ்வாய் 13:28 | பார்வைகள் : 214


இரவு விடுதியில் நடைபெற்ற மோதல் காரணமாக பென் ஸ்டோக்ஸ் கேப்டன் பதவியை இழக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து அணி, இங்கிலாந்திற்கு வருகை தந்துள்ளது.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் வரும் ஜூன் 17 ஆம் திகதி தொடங்க உள்ளது.

இந்த போட்டியில், இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன் கலந்து கொள்வது சிக்கலாகியுள்ளது. மேலும், பென் ஸ்டோக்ஸ் கேப்டன் பதவியை இழக்க வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.

ஆஷஸ் தொடரில் 4-1 என்ற கணக்கில் அவுஸ்திரேலியாவிடம் இங்கிலாந்து அணி படுதோல்வியடைந்ததையடுத்து, வீரர்கள் இரவு நேரக்கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்(ECB) அறிவுறுத்தியது.

இந்நிலையில், அணி நெறிமுறைகளை மீறி பென் ஸ்டோக்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் முதல் டெஸ்ட் போட்டிக்கு பின்னர் இரவு விடுதிக்கு சென்று வந்ததை ECB உறுதிப்படுத்தியுள்ளது.  

மேலும், அதிகாலை நேரத்தில் சரசென்ஸ் ரக்பி வீரர் ஒருவருடன் இங்கிலாந்து வீரர்கள் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

ரக்பி வீரர் அட்கின்சனை நோக்கி குத்த முயன்றதாகவும், ஆனால் அது வீரர்களை மேற்பார்வையிடுவதற்காக அந்த இரவு விடுதியில் இருந்த இசிபியின் பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கியதாகவும் நம்பப்படுகிறது.

இதில்பாதுகாப்பு அதிகாரிக்குத் தையல் போடப்பட்டதாகவும், ஸ்டோக்ஸ் மற்றும் அட்கின்சனுக்குக் காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து விசாரணை நடத்தி வரும் ECB, 2வது டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவிப்பதை தாமதப்படுத்தியுள்ளது.

மேலும், இருவரும் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படாது எனவும், பென் ஸ்டோக்ஸின் கேப்டன் பதவியை பறிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.  

அப்படி நடந்தால், பென் ஸ்டோக்ஸிற்கு பதிலாக 2வது டெஸ்ட் போட்டியில் ஹாரி ப்ரூக் அணியை வழிநடத்துவார்.

சரசென்ஸ் வீரர்தான். இந்தக் குழப்பம் அனைத்திற்கும் காரணம் அவருக்கு கேட்ட பெயர் உள்ளது என்றும், ஸ்டோக்ஸ் தனது கேப்டன் பதவியை இழப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும் சரசென்ஸ் அகாடெமி கூறியுள்ளது.

இவ்வாறான சர்ச்சைகளில் இங்கிலாந்து வீரர்கள் சிக்குவது இது முதல்முறையல்ல. முன்னதாக ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ், ஜேக்கப் பெத்தல் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் இரவு விடுதி, கைகலப்பு சர்ச்சைகளில் சிக்கி விசாரணைக்கு உள்ளாகியுள்ளனர்.