Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் தமிழ் ரசிகர்களை கவர களமிறங்கு ஜோதிகா?

மீண்டும் தமிழ் ரசிகர்களை கவர களமிறங்கு ஜோதிகா?

8 ஆனி 2026 திங்கள் 16:28 | பார்வைகள் : 342


பிரபல முன்னணி நடிகையான ஜோதிகா தற்போது பாலிவுட் இந்தி திரைப்படங்கள் மற்றும் முக்கிய வெப் சீரீஸ்கள் என தனது நடிப்பு பயணத்தை தேர்ந்தெடுத்து தொடர்ந்துகொண்டிருக்கிறார். இருப்பினும், தமிழ் திரையுலகில் தனக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய மற்றும் அழுத்தமான கதைகளில் நடிக்க வேண்டும் என்பதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.

தனிப்பட்ட காரணங்களால் மும்பையில் வசித்து வந்தாலும், சென்னைக்கு வரும்போதெல்லாம் இளம் இயக்குநர்களை நேரில் சந்தித்து தொடர்ந்து கதைகளை கேட்டு வருகிறார். கதையின் தரம் சிறப்பாக இருக்கும் பட்சத்திலும், அந்த பாத்திரம் தனது நடிப்பிற்கு சவால் அளிக்கும் வகையில் அமைந்தாலும் உடனடியாக படத்தில் நடிக்க அவர் பச்சைக்கொடி காட்ட தயாராக இருக்கிறார்.

சமீபத்தில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியின் தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘கருப்பு’ திரைப்படத்தின் அமோக வரவேற்பு, இந்த தம்பதியினரை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது. இந்த வெற்றியின் உத்வேகத்தால், விரைவில் ஒரு தரமான தமிழ் ப்ராஜெக்ட் மூலம் ஜோதிகா மீண்டும் தமிழ் ரசிகர்களை கவர களமிறங்குவார் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.