Sécurité Sociale திருப்பிச் செலுத்தும் தொகை நேரடியாக SMS மூலம் அறிவிப்பு!!
6 ஆனி 2026 சனி 14:49 | பார்வைகள் : 298
பொதுக் கணக்குகள் அமைச்சர் David Amiel, மக்கள் தங்கள் வரிகளும் சமூகப் பங்களிப்புகளும் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை தெளிவாக அறிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்காக, மருத்துவர், மருந்தகம், சுகாதார மையம் அல்லது மருத்துவமனை சேவையைப் பயன்படுத்தியவுடன், அதன் செலவு மற்றும் Sécurité sociale வழங்கிய திருப்பிச் செலுத்தல் தொகையை SMS மூலம் உடனடியாக அறிவிக்கும் திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார்.
அவரின் கருத்துப்படி, கடந்த 50 ஆண்டுகளில் அரசுச் செலவின உயர்வில் பெரும்பங்கு ஓய்வூதியம் மற்றும் சுகாதாரத் துறைகளுக்கே சென்றுள்ளது. எனவே, இந்த இரண்டு துறைகளிலும் அதிக வெளிப்படைத்தன்மையை உருவாக்குவது அவசியம் என்றும், இதன் மூலம் மக்கள் பொதுச் சேவைகளின் உண்மையான மதிப்பை நன்கு புரிந்துகொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.
தற்போது, மருத்துவச் செலவுத் திருப்பிச் செலுத்தல் விவரங்களை மக்கள் தங்களின் கணக்கறிக்கைகள் அல்லது ameli.fr இணையதளம் மூலம் அறிய முடிகிறது. புதிய SMS முறை இந்த தகவல்களை மேலும் எளிமையாகவும் நேரடியாகவும் வழங்கும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த சுகாதாரத் துறை மற்றும் தேசிய சுகாதார காப்பீட்டு அமைப்புடன் அரசு இணைந்து பணியாற்றி வருகிறது.
இதேவேளை, Sécurité sociale கணக்குகள் ஆணையத்தின் மதிப்பீட்டின்படி, 2026 ஆம் ஆண்டில் Sécurité sociale அமைப்பின் பற்றாக்குறை 23.2 பில்லியன் யூரோக்கள் வரை அதிகரிக்கக்கூடும். இது முன்பு கணிக்கப்பட்ட தொகையை விட 3.8 பில்லியன் யூரோக்கள் அதிகமாகும். இந்த நிதிநிலையை கருத்தில் கொண்டு, செலவுகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்குவது அவசியம் என்று அரசு கருதுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan