Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானில் பள்ளிவாசல் திறந்த பாகிஸ்தான்... சட்டவிரோதம் என அறிவிப்பு

ஜப்பானில் பள்ளிவாசல் திறந்த பாகிஸ்தான்... சட்டவிரோதம் என அறிவிப்பு

3 ஆனி 2026 புதன் 16:50 | பார்வைகள் : 476


ஜப்பானின் சைதாமா மாகாணத்தில், கவாகோ (Kawagoe) பகுதியில், பாகிஸ்தான் தூதரகம் சார்பில் ஒரு புதிய பள்ளிவாசல் திறக்கப்பட்டது.

ஆனால், டோக்கியோ நகராட்சி அதிகாரிகள் அந்த கட்டிடம் சட்டப்படி அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக கூறி, 'சட்டவிரோதம்' என அறிவித்துள்ளனர்.

இந்த பள்ளிவாசல் 4,500 சதுர மீற்றர் பரப்பளவில், மலைக் காடு நிலம் என வகைப்படுத்தப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.

அந்த இடம், நகர வளர்ச்சி கட்டுப்பாட்டு பகுதியாக இருப்பதால், சிறப்பு அனுமதி இல்லாமல் எந்த கட்டிடமும் கட்ட முடியாது.

பாகிஸ்தான் தூதர் அப்துல் ஹமீத், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற திறப்பு விழாவில் கலந்து கொண்டது, இந்த விவகாரத்தை மேலும் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.

பின்னர், பாகிஸ்தான் தூதரகம், "எந்த கட்டிடமும் உள்ளூர் சட்டப்படி அனுமதி பெறாமல் கட்டப்படக்கூடாது" என சமூகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், யஷியோ பள்ளிவாசல் நிர்வாகிகளும், "அனுமதி இல்லாமல் பள்ளிவாசல் கட்டுவது நல்லது அல்ல. உள்ளூர் மக்களுடன் நல்லுறவு பேணியே பள்ளிவாசல் சூழல் உருவாக வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.