Paristamil Navigation Paristamil advert login

ரஜினியின் சுயசசரிதையை எழுதுவது யார் தெரியுமா?

ரஜினியின் சுயசசரிதையை எழுதுவது யார் தெரியுமா?

2 ஆனி 2026 செவ்வாய் 16:36 | பார்வைகள் : 194


50 வருடங்களுக்கும் மேல் தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அபூர்வ ராகங்கள் தொடங்கி ஜெயிலர் 2 வரை பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என எல்லா மொழிகளிலும் நடித்தவர் ரஜினி. ஹாலிவுட் படங்களில் கூட நடித்திருக்கிறார்.

இந்திய சினிமா உலகம் இவரை ‘தலைவர்’ என கொண்டாடுகிறது. 75 வயதிலும் இன்னமும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகர் ரஜினி மட்டுமே. அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் துவங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஒருபக்கம் ரஜினி தனது சுயசரிதையை எழுதும் பணியிலும் ஈடுபட்டு இருக்கிறார். ரஜினி சொல்ல சொல்ல விகடன் பத்திரிக்கையில் பணிபுரிந்த ஒரு பத்திரிக்கையாளர் எழுதி வருகிறாராம். ரஜினி மேடை கிடைத்தாலே மிகவும் வெளிப்படையாக பேசும் பழக்கம் கொண்டவர். அப்படி இருக்கும் போது சுயசரிதையில் எவ்வளவு விஷயங்களை சொல்வார் என்பது தெரியவில்லை. ரஜினியின் சுயசசரிதை வெளியானால் அது பரபரப்பாக பேசப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.