Paristamil Navigation Paristamil advert login

ஞாயிற்றுக்கிழமை முதல் பரிஸ் உட்பட ஏனைய பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை!!

ஞாயிற்றுக்கிழமை முதல் பரிஸ் உட்பட ஏனைய பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை!!

29 வைகாசி 2026 வெள்ளி 21:21 | பார்வைகள் : 706


நாடுமுழுவதும் தற்போது கடும் வெப்ப அலைக்குள் உள்ளது. வெள்ளிக்கிழமை பல பகுதிகளில் வெப்பநிலை மிகவும் அதிகமாக இருந்தாலும், அட்லாண்டிக் கடற்கரை பகுதிகளில் சிறிய குளிர்ச்சி ஆரம்பமாகியுள்ளது. 

Brest, Rennes மற்றும் Biarritz போன்ற நகரங்களில் வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. ஆனால் பரிஸ் மற்றும் லில் போன்ற கிழக்குப் பகுதிகளில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெப்பத்துடன் சேர்ந்து இரவுகளும் மிகவும் சூடாகவே இருக்கும் என்று Météo-France எச்சரித்துள்ளது. 

சில நகரங்களில் இரவு வெப்பநிலை 20°C க்குக் கீழே செல்லாது. இதனால் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையும் கடும் வெப்பம் நீடிக்கும் நிலையில், நாட்டின் கிழக்குப் பகுதிகளில் மேலும் அதிக வெப்பம் எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், அட்லாண்டிக் கடலிலிருந்து குளிர்ந்த காற்று நுழைவதால், சில பகுதிகளில் வெப்பநிலை குறையத் தொடங்கும். Poitou-Charente முதல் பரிஸ் மற்றும் Benelux பகுதிகள் வரை இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை முதல் நாடுமுழுவதும் முழுவதும் வெப்பநிலை குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்குப் பகுதியைத் தவிர மற்ற இடங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய காலநிலை காணப்படும். 

திங்கள்கிழமை முதல் காலநிலை மீண்டும் இயல்பான நிலைக்கு திரும்பத் தொடங்கும் என்றும், அடுத்த வாரத்தின் நடுப்பகுதிக்குள் வெப்பநிலை சாதாரண அளவுக்கு குறையும் என்றும் Météo-France தெரிவித்துள்ளது.