Paristamil Navigation Paristamil advert login

ஜூலையில் தொடங்கும் மின்சார வாகன சமூக குத்தகை திட்டம்!!

ஜூலையில் தொடங்கும்  மின்சார வாகன சமூக குத்தகை திட்டம்!!

19 சித்திரை 2026 ஞாயிறு 07:49 | பார்வைகள் : 526


அரசின் ஆற்றல் துறை அமைச்சரான Maud Bregeon, எரிபொருள் விநியோகஸ்தர்கள் முன்வைத்த ஆற்றல் சேமிப்பு சான்றிதழ்கள் (CEE) திட்டத்தை மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையைத் தெளிவாக மறுத்துள்ளார். எரிபொருள் விலைகளை குறைக்கும் நோக்கில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும், அரசு அதற்கு இணங்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இதனுடன், குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு உதவியாக “சமூக குத்தகை திட்டமான” மின்சார வாகன திட்டம் வரும் ஜூலை மாதத்தில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மாதத்திற்கு 2,200 யூரோக்களுக்கு குறைவாக வருமானம் பெறும் மக்களை இலக்கு வைத்து, ஆரம்பத்தில் 50,000 வாகனங்கள் வழங்கப்படவுள்ளன. பயனாளர்கள் மாதம் 100 முதல் 200 யூரோக்கள் வரை செலுத்த வேண்டியிருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், பாசிச எரிசக்திகளின் மீது உள்ள சார்பை குறைப்பது அவசியம் என்பதால், இந்த மாற்றத்துக்கு ஆதரவாக உள்ள உதவித் திட்டங்களை திடீரென நிறுத்துவது பொருத்தமற்றது என அமைச்சர் வலியுறுத்தினார். உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், அதன் தாக்கம் எரிபொருள் விலைகளிலும் வெளிப்பட வேண்டும் என்றும், இந்த விவகாரம் குறித்து விநியோகஸ்தர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எழுத்துரு விளம்பரங்கள்