Paristamil Navigation Paristamil advert login

லெபனானில் கொல்லப்பட்ட ஒரு பிரெஞ்சு இராணுவ வீரர்!!

லெபனானில் கொல்லப்பட்ட ஒரு பிரெஞ்சு இராணுவ வீரர்!!

18 சித்திரை 2026 சனி 17:16 | பார்வைகள் : 436


லெபனானின் தெற்கு பகுதியில், ஐரோப்பிய நாடுகள் அமைதிப்படை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பிரெஞ்சு இராணுவ வீரர் சார்ஜெண்ட்-சீஃப் ஃப்ளோரியன் மொன்டோரியோ (Le sergent-chef Florian Montorio) உயிரிழந்தார்; மேலும் மூன்று வீரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தைப் பற்றி பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron தகவல் வெளியிட்டார்.

இந்த தாக்குதலுக்குப் பொறுப்பானது ஹெஸ்பொல்லா என்று தோன்றுகிறது என்று ஜனாதிபதி கூறியிருந்தாலும், அந்த அமைப்பு இதை மறுத்துள்ளது. லெபனான் அரசாங்கம் குற்றவாளிகளை கைது செய்து, ஐரோப்பிய நாடுகள் படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Emmanuel Macron லெபனான் தலைவர் Joseph Aoun மற்றும் பிரதமர் Nawaf Salam ஆகியோருடன் பேசி, அமைதிப்படை வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இந்த தாக்குதலை லெபனான் அதிகாரிகளும் கண்டித்து, பொறுப்பாளர்களை தண்டிப்பதாக தெரிவித்தனர்.

பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் Catherine Vautrin கூறியதன்படி, மொன்டோரியோ ஒரு பணியில் இருந்தபோது ஆயுதக்குழுவின் திடீர் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். 18 ஆண்டுகள் சேவையாற்றிய அவர் துணிச்சலான மற்றும் அனுபவமிக்க வீரராக நினைவுகூரப்படுகிறார்.

எழுத்துரு விளம்பரங்கள்