உதவித் தொகைகள் ஒருங்கிணைப்பு: வருமானம் உயரும் குடும்பங்களும், இழக்கும் தரப்பும்!!
13 சித்திரை 2026 திங்கள் 07:45 | பார்வைகள் : 915
சமூக நலத்திட்டங்களை ஒருங்கிணைக்கும் புதிய “ஒற்றை ஒற்றுமை உதவி” (Allocation de solidarité unifiée – ASU) திட்டம் தொடர்பாக முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் வழங்கப்படும் RSA, prime d’activité மற்றும் APL போன்ற பல்வேறு உதவித் தொகைகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு ஒருங்கிணைந்த தொகையாக மாற்றப்படும் என அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் முக்கிய நோக்கம், வேலை செய்யும் மக்களுக்கு அதிக வருமான நன்மை கிடைக்கச் செய்வதுடன், வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதாகும். இதற்காக, அனைத்து உதவித் திட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தகுதி விதிகள் கொண்டு வரப்படுகின்றன. குடும்பத்தின் வருமானம் மற்றும் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு “சமூக குறிப்பு வருமானம்” (revenu social de référence) கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் உதவித் தொகை நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் கணக்கீடுகளின்படி, இந்த மாற்றத்தால் சுமார் 3.7 மில்லியன் குடும்பங்கள் பயன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு மாதத்திற்கு சராசரியாக 100 யூரோ வரை கூடுதல் வருமானம் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக குறைந்த அளவு வேலை செய்து வருமானம் பெறும் நபர்களுக்கு இது அதிக நன்மை அளிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த மாற்றம் அனைவருக்கும் சாதகமாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. சிலர் வருமான இழப்பை சந்திக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது RSA, prime d’activité மற்றும் APL பெறும் மக்களில், “பயனடைந்தவர்கள்” மட்டுமின்றி “பாதிக்கப்பட்டவர்களும்” இருப்பார்கள் என அரசு தரப்பே ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, இந்த பெரிய சமூக நலத் திட்ட மாற்றம் அரசியல் மற்றும் சமூக ரீதியாக பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan