Paristamil Navigation Paristamil advert login

ANEF தளத்தில் தொடரும் பிரச்சினைகள்: நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கை!!

ANEF தளத்தில் தொடரும் பிரச்சினைகள்: நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கை!!

6 வைகாசி 2026 புதன் 15:18 | பார்வைகள் : 2654


வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் வசிப்பதற்கான அனுமதி (titre de séjour) விண்ணப்ப தளத்தில் உள்ள கோளாறுகளை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்ய வேண்டும் என்று Conseil d'État அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த கோளாறுகள், விண்ணப்பதாரர்களின் சேவையை அணுகும் உரிமையையும், சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமைகளையும் பாதிக்கின்றன என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ANEF தளத்தை மேம்படுத்த அரசு சில நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும், அதன் செயல்பாட்டில் இன்னும் கடுமையான பிரச்சினைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரே நேரத்தில் பல்வேறு காரணங்களுக்காக பல விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாத நிலை குறித்து நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்கள் கோப்புகளை திருத்தவும், புதுப்பிக்கவும் இயல வேண்டும். குறிப்பாக, நிர்வாகம் பதிவு செய்யாததால் தவறாக மறுக்கப்பட்ட விண்ணப்பங்களை சரிசெய்யும் வாய்ப்பு இருக்க வேண்டும். இத்தகைய தடைகள், வசிப்பதற்கான உரிமை மற்றும் விண்ணப்ப பரிசீலனையில் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.  தற்போதைய நிலையில், முதல் விண்ணப்பம் தீர்மானிக்கப்படாத வரை மற்றொரு விண்ணப்பம் சமர்ப்பிக்க முடியாது. இதனை 12 மாதங்களுக்குள் சரிசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிர்வாகத் தவறுகளால் விண்ணப்பங்கள் மறுக்கப்படும் சூழலில், அதை சரிசெய்ய வழிகள் இல்லாதது விண்ணப்பதாரர்களின் உரிமைகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. Défenseur des droits வெளியிட்ட அறிக்கையின்படி, 2020 முதல் 2024 வரை இந்த தளத்துடன் தொடர்புடைய புகார்கள் 400% அதிகரித்துள்ளன. இதன் விளைவாக வெளிநாட்டவர்கள் வேலை இழப்பு, கடன் சுமை, வீடு இழப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்; இதில் சட்டபூர்வமாக நீண்டகாலமாக வசித்து வருபவர்களும் அடங்குகின்றனர்.