Paristamil Navigation Paristamil advert login

சிங்கப்பூரில் ஒரு இளம் பிரெஞ்சு இளைஞனிற்கு சிறை தண்டனை ஆபத்தில்!

சிங்கப்பூரில் ஒரு இளம் பிரெஞ்சு இளைஞனிற்கு சிறை தண்டனை ஆபத்தில்!

27 சித்திரை 2026 திங்கள் 14:49 | பார்வைகள் : 378


18 வயதான  பிரெஞ்சு இளைஞன் சிங்கப்பூரில் பொது ஒழுங்கை குலைத்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் ஒரு குளிர்பான இயந்திரத்தில் இருந்த உறிஞ்சு குழாயை (Straw) நக்கி, அதை மீண்டும் அதனுள்ளே வைத்ததற்காக மூன்று மாதங்கள் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

Media

இச் செயலை காணொளியாகப் பதிவு செய்து Instagram‑இல் வெளியிட்டார்


நீதிமன்ற ஆவணங்களின்படி:

இளைஞர் மார்ச் 12 அன்று தனது செயலை காணொளியாகப் பதிவு செய்தார்

அதை Instagram‑இல் வெளியிட்டார்

இது «பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்» என்பதை அவர் அறிந்திருந்தார்

அவரிடம் மாணவர் விசா உள்ளது.


இரண்டாவது குற்றச்சாட்டு

நிறுவனத்திற்கு சேதம்

அவர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு:

iJooz என்ற நிறுவனம் பயன்படுத்தும் குளிர்பான இயந்திரத்தில்

அவரது செயல் «அநியாயமான இழப்பு அல்லது சேதம்» ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

நிறுவனம் 500 உறிஞ்சு குழாய்களை0 (Straw) மாற்ற வேண்டியிருந்தது.

இந்த குற்றச்சாட்டு இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் அபராதத்திற்குப் பாத்திரமாகும்.

வழக்கு மே 22 அன்று விசாரணைக்கு வரும்.