Paristamil Navigation Paristamil advert login

2021 ராம்புயே தாக்குதல் - உள்துறை அமைச்சர்இன்று அஞ்சலி செலுத்துகிறார்!

2021 ராம்புயே தாக்குதல் -  உள்துறை அமைச்சர்இன்று அஞ்சலி செலுத்துகிறார்!

27 சித்திரை 2026 திங்கள் 14:10 | பார்வைகள் : 287


உள்துறை அமைச்சர் லொரோன் நூனெஸ் (Laurent Nunez rend), 2021 ஏப்ரல் 23 அன்று ராம்புயே(Rambouillet) காவல்நிலைய நுழைவாயிலில் கத்தியால் கொலை செய்யப்பட்ட காவல்துறை பணியாளர் ஸ்தெஃபானி மொன்பெர்மே (Stéphanie Monfermé)  அவர்களுக்கு அஞ்சலி செலுத்த, இந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 27) ராம்புயே (Yvelines) நகருக்கு செல்கிறார்.

அஞ்சலி நிகழ்வு

நிகழ்வு காலை 10.30க்கு தொடங்கும்

«குடியரசு வரவேற்பு» மூலம் ஆரம்பம். 
முடிவில் தேசிய எழுச்சி கீதம் மார்செய்யேஸ் (la Marseillaise) இசைக்கப்படும்.

ஸ்தெஃபானி மொன்பெர்மே (49), 1993 முதல் காவல்துறையில் பணியாற்றி வந்தார். திருமணமானவர், இரண்டு குழந்தைகளின் தாய். அவரது கொலை நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எமானுவல் மக்ரோன் பங்கேற்ற தனியார் இறுதிச்சடங்குகளுக்குப் பிறகு, அடுத்த நாள் அதிகாரப்பூர்வ அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. அவர் மரணத்திற்குப் பிறகு Légion d’honneur விருதும் பெற்றார்.

காவல்துறையில் நீடிக்கும் மன உளைச்சல்

இந்த தாக்குதல், 2016 Magnanville தாக்குதல் போன்ற காவல்துறையை குறிவைத்த பிற சம்பவங்களின் நினைவுகளை மீண்டும் எழுப்பியது. இதனால் காவல்துறையில் மனநல ஆதரவு திட்டங்கள், சமூக உதவி நடவடிக்கைகள் போன்றவை வலுப்படுத்தப்பட்டன.

விசாரணை முடிவு

2025 இறுதியில், பயங்கரவாத எதிர்ப்பு நீதித்துறை விசாரணையை முடித்தது.

நீதிபதி யாரும் உடந்தையாக இல்லை என்று கூறி தீர்ப்பு வழங்கினார்

தாக்குதலாளி 2009 முதல் பிரான்சில் சட்டவிரோதமாக இருந்தவர்

அவர் தனியாகவே செயல்பட்டார்.

ஆனால் தாக்குதல் பயங்கரவாத நோக்கத்துடன் நடந்தது என்பது தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டது.

காவல்துறையை குறிவைத்த தாக்குதல் முறை!

தாக்குதலுக்கு முன் ஜிஹாதி உள்ளடக்கங்களைப் பார்வையிடல்

தேசிய பயங்கரவாத வழக்கறிஞர் அலுவலகமும் தீர்ப்பைஆதரித்தது. தாக்குதலாளியின் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது; அவர் «தற்கொலை நோக்கத்துடன்» செயல்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது. பிரான்சிலும் துனிசியாவிலும் பலர் காவலில் வைக்கப்பட்டாலும், யாருக்கும் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை.