“நாங்கள் கவனிக்கப்படாத தொழில்”-டக்சி கூட்டமைப்பு குற்றச்சாட்டு!!
26 சித்திரை 2026 ஞாயிறு 20:30 | பார்வைகள் : 2226
மத்திய கிழக்கு போரின் காரணமாக எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், டக்சி ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையை பற்றி பேச அவர்கள் போக்குவரத்து அமைச்சகத்துடன் சந்திக்க இருக்கிறார்கள். தேசிய டாக்சி கூட்டமைப்பு, தங்களை அரசு கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன் நடைபெற்ற சந்திப்பு எந்த தீர்வையும் அளிக்கவில்லை. அரசுக்கு கூடுதல் செலவு வரக்கூடாது என்பதே முக்கியமாக பேசப்பட்டது என்று கூட்டமைப்பு தெரிவிக்கிறது. இதனால், எரிபொருள் விலையை 1.80 யூரோவில் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், எரிபொருள் வரியை வருடத்திற்கு ஒருமுறை அல்லாமல் மூன்று மாதத்திற்கு ஒருமுறை திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர். விலை மாற்றங்களை சமாளிக்க காப்பீட்டு முறைமையும் கொண்டு வர வேண்டும் என்றும், CEE வரியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
அரசு தங்களின் பிரச்சினையின் தீவிரத்தை உணரவில்லை என்று டக்சி கூட்டமைப்பு கூறுகிறது. பல நிறுவனங்கள் ஏற்கனவே நெருக்கடியில் உள்ளன. கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், டrக்சி ஓட்டுநர்கள் மீண்டும் போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலை உருவாகும் என்று எச்சரிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan