Paristamil Navigation Paristamil advert login

ஈரானில் செயல்படுத்தப்பட்டுள்ள வான் பாதுகாப்பு அமைப்பு

ஈரானில் செயல்படுத்தப்பட்டுள்ள வான் பாதுகாப்பு அமைப்பு

24 சித்திரை 2026 வெள்ளி 10:22 | பார்வைகள் : 492


ஈரானில் போர் நிறுத்தம் அமலில் உள்ள போதிலும், வான் நடவடிக்கைகள் குறித்த தகவலைத் தொடர்ந்து தெஹ்ரானின் பல்வேறு இடங்களில் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்தள்ளது.

தெஹ்ரானின் சில பகுதிகளில் வியாழக்கிழமை மாலை வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

போர் நிறுத்தம் தொடங்கியதில் இருந்து முதல் முறையாக, வான்வழி நடவடிக்கைகள் குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து, ஈரான் உஷார் நிலையை தீவிரப்படுத்தியுள்ளது.

மேற்கு தெஹ்ரானில் "வான் பாதுகாப்பு துப்பாக்கி சூடு சத்தம்" கேட்டதாக ஐ.ஆர்.என்.ஏ. அரசு செய்தி நிறுவனம் கூறியது.

அதேவேளையில், "விரோத இலக்குகளை" எதிர்கொள்வதற்காக தலைநகரின் பல பகுதிகளில் அந்த அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாக மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்தது.