Paristamil Navigation Paristamil advert login

மத்திய கிழக்கு போர் பதற்றத்தற்கு மத்தியில் அமெரிக்காவில் தற்கொலைத்தாக்குதல்

மத்திய கிழக்கு போர் பதற்றத்தற்கு மத்தியில் அமெரிக்காவில் தற்கொலைத்தாக்குதல்

14 பங்குனி 2026 சனி 14:26 | பார்வைகள் : 339


ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்டுள்ள போர் மத்திய கிழக்கிற்கு மட்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

12.3.2026 இல் அமெரிக்காவில்  தற்கொலைத்தாக்குதல் முயற்சி இடம் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவிலுள்ள மிகவும் பிரபலமான யூத வழிபாட்டிடம் ஒன்றை நோக்கி வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட வாகனமொன்றுடன் சென்றுள்ளார் அயமட் முகமது ஹசாலி.

அந்தவேளை அங்கு 140 மாணவர்கள் இருந்துள்ளனர்.மாணவர்கள் அனைவரும் வந்தபின்னர் இந்த கட்டடத்தை இடித்து தரைமட்டமாக்குவதே தாக்குதலாளியின் இலக்கு.

எனினும் வாகனம் புறப்பட்டு அந்த இடத்தை நெருங்கியவேளை அங்கிருந்த காவலர்கள் வாகனத்தை மறித்தவேளை அவர்களைநோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் அயமட் முகமது ஹசாலி.

காவலர்களும் பதில் தாக்குதல் நடத்தவே வாகனத்துடன் குறித்த வெடித்து கருகி பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்ற அதேநாளில் அமெரிக்காவின் வேஜினியா மாநிலத்தில் முகமட் ஜொல்லா என்ற 36 வயது இளைஞன் பல்கலைக்கழகத்தில் அல்லாகு அக்பர் என கத்திக்கொண்டே துப்பாகி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.இந்த தாக்குதலில் ஒரு விரிவுரையாளர் கொல்லப்பட இரண்டு மாணவர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவங்கள் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ஈரான் இரத்தப்பழி வாங்குமென ஈரான் புதிய உச்ச தலைவர் தெரிவித்த சில மணி நேரங்களில் இடம்பெற்றிருக்கின்றன.