Paristamil Navigation Paristamil advert login

பெட்ரோல் தொடர்பான விவகாரம் - சர்வதேச சக்தி முகமை அவசரக் கூட்டம் !!

பெட்ரோல் தொடர்பான விவகாரம் - சர்வதேச சக்தி முகமை அவசரக் கூட்டம் !!

10 பங்குனி 2026 செவ்வாய் 21:17 | பார்வைகள் : 399


பிரான்சின் முன்முயற்சியில் இன்று காலை நடைபெற்ற G7 சக்தி ஆற்றல் அமைச்சர்களின் சந்திப்பைத் தொடர்ந்து சர்வதேச ஆற்றல் முகமை (AIE -Agence internationale de l'Énergie) இன்று தனது உறுப்புநாடுகளின் அரசுகளை 'அவசரக் கூட்டம்' ஒன்றுக்கு அழைத்துள்ளது.

Media

கருப்பு தங்கத்தின் (மசகு எண்ணெய் -பெட்ரோல்) விலை வேகமாக உயர்ந்து வரும் நிலையில், மூலோபாய கையிருப்புகளை பயன்படுத்துவதற்கான சாத்தியமான 'முடிவை' மதிப்பிடுவதற்காக இந்த கூட்டம் நடத்தப்படுவதாக, அதன் நிர்வாக இயக்குநர் பாதிஹ் பைரோல் (Fatih Birol) அறிவித்தார்.

'விநியோக பாதுகாப்பின் தற்போதைய நிலை மற்றும் சந்தை நிலைகளை மதிப்பிடுவதற்கும், யுஐநு உறுப்புநாடுகளின் அவசர கையிருப்புகளை சந்தையில் வெளியிட வேண்டுமா என்பதைப் பற்றிய விபரம் பின்னர் எடுக்கப்படும் முடிவுக்கு வழிகாட்டுவதற்கும் இநதசஇ சந்திப்பு உதவும்' எனவும் பாதிஹ் பைரோல் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

 

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026