ஈரான் நோக்கி ஈரூடக உலங்கு வானூர்திதாங்கி போர்க்கப்பல் -
6 பங்குனி 2026 வெள்ளி 19:27 | பார்வைகள் : 1199
மத்திய கிழக்கில் நடைபெறும் போரில், பிரான்ஸ் தனது இராணுவ அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மத்தியதரைக் கடலில் ஒரு ஈரூடக உலங்கு வானூர்திதாங்கி போர்க்கப்பலை (Le porte-hélicoptères amphibie Tonnerre) களத்திற்கு அனுப்பபத் தீர்மானித்துள்ளது என, இன்று வெள்ளிக்கிழமை ஆயுதப்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

«மத்திய மற்றும் நெருக்கமான கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியை முன்னிட்டு, பிரான்ஸ் ஆயுதப்படைகளின் அமைப்பை முழுமைப்படுத்தும் வகையில் ஈரூடக உலங்கு வானூர்திதாங்கி போர்க்கப்பல் Tonnerre இனை மத்தியதரைக் கடல் களமுனையில் நிறுத்தியுள்ளது» என ஆயுதப்படைத் தலைமையகப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.

2024 இலையுதிர் காலத்தில், இதே வகை கப்பல் லெபனான் கடற்கரைக்கு அருகில் முன்கூட்டியே நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொல்லா இடையிலான பதற்றம் அதிகரித்திருந்ததால், பிரெஞ்சு குடிமக்களை அவசரமாக நாடு திரும்பச் செய்ய வேண்டிய சூழல் உருவாகலாம் என்ற முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan