Paristamil Navigation Paristamil advert login

இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும் - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும் - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

8 சித்திரை 2026 புதன் 16:57 | பார்வைகள் : 229


இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும். அது ஒருபோதும் மீண்டு வராது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ட்ரம்ப் தனது ட்ருத் சோஷியல் சமூக ஊடக பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும். இனி ஒருபோதும் மீண்டுவர முடியாது. அது நடக்க நான் விரும்பவில்லை. ஆனால் அது அநேகமாக நடக்கும்.

இருப்பினும், இப்போது நம்மிடம் முழுமையான மற்றும் மொத்தமான ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், மாறுபட்ட, புத்திசாலித்தனமான மற்றும் தீவிரவாதம் குறைந்த சிந்தனையாளர்கள் மேலோங்கி இருப்பதால், ஒருவேளை புரட்சிகரமான அற்புதமான ஒன்று நடக்கலாம், யாருக்குத் தெரியும்?

உலகின் நீண்ட மற்றும் சிக்கலான வரலாற்றின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றான, இன்று இரவு நாம் அதைக் கண்டறிவோம்.

47 ஆண்டுகால அராஜகம், ஊழல் மற்றும் மரணம் ஒருநாள் முடிவுக்கு வரும்.

ஈரான் பெருமக்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்!” என்று பதிவிட்டுள்ளமை சர்வதேச மட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.