ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் - 8 பேர் பலி
4 சித்திரை 2026 சனி 16:00 | பார்வைகள் : 286
ஆப்கானிஸ்தானில் 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடுகளிலும் உணரப்பட்டதுடன், இந்தியாவின் டெல்லி என்.சி.ஆர். பகுதிகளிலும் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, தராவான் அருகே 71.01 டிகிரி கிழக்கு தொகுதிக்கும் 36.52 டிகிரி வடக்கு அகலாங்குக்கும் இடையில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இது சுமார் 150 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன.
இந்தியாவில் நொய்டா, சண்டிகர், லூதியானா உள்ளிட்ட பஞ்சாப் மாநில நகரங்கள், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச், ஸ்ரீநகர், உதம்பூர் மற்றும் டேராடூன் உள்ளிட்ட பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
அதேவேளை, பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத், கைபர் பக்துன்க்வா, பெஷாவர் மற்றும் பஞ்சாப் மாகாணத்தின் பல இடங்களிலும் நில அதிர்வு சில விநாடிகள் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, ஆப்கானிஸ்தானின் பதக்ஷான் மாகாணத்தில், பாகிஸ்தான்–தஜிகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள இந்துகுஷ் மலைத் தொடரில் அமைந்திருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் காபூலில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒரு குழந்தை காயமடைந்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் தொடர்ந்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan