சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு
2 சித்திரை 2026 வியாழன் 18:40 | பார்வைகள் : 1458
தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் காணாமல் போனமை தொடர்பில் பிள்ளையானிடம் நீண்டகாலமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்த வழக்கின் முக்கிய சந்தேகநபராக அவர் கருதப்படுகிறார்.
இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, சட்டமா அதிபரின் ஆலோசனைகள் மற்றும் மேலதிக விசாரணைகள் நிறைவடையும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த உபவேந்தர் கொழும்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்டிருந்த போதே இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டுக் காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் கடந்த சில வாரங்களாக பிள்ளையானிடம் சிஐடியினர் வாக்குமூலங்களைப் பெற்று வந்தனர்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் அவர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த வழக்கு இலங்கையின் அரசியல் மற்றும் கல்விச் சமூகத்தினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிள்ளையான் மீதான ஏனைய குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு அவரது அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. அடுத்த கட்ட விசாரணைகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan