ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களுக்கு கட்டணம் - ஈரான் பாராளுமன்றக் குழு அனுமதி
31 பங்குனி 2026 செவ்வாய் 15:32 | பார்வைகள் : 246
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு சுங்கக் கட்டணம் விதிக்கும் திட்டங்களுக்கு ஈரான் பாராளுமன்றக் குழு அனுமதி அளித்துள்ளதாக, இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேசியப் பாதுகாப்பு ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் இந்தத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், அதன்படி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல்கள் நீரிணை வழியாகச் செல்ல தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரானுக்கு எதிரான தடைகளில் பங்கேற்றுள்ள பிற நாடுகளின் கப்பல்களுக்கும் இதன் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய சுங்கக் கட்டண முறை தொடர்பான அறிவிப்பு, ஈரானிய அரசு தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டதாகவும், ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓமானுடன் இணைந்து இந்த திட்டம் அமுல்படுத்தப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச மசகு எண்ணெய் விநியோகத்தின் சுமார் 20 சதவீதம், ஈரான் மற்றும் ஓமான் இடையே அமைந்துள்ள இந்த முக்கிய கடல் மார்க்கம் வழியாகவே கடத்தப்படுகிறது.
இந்நிலையில், போர் தொடங்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணையை கடக்கும் கப்பல்களின் எண்ணிக்கை சுமார் 95 சதவீதம் வரை குறைந்துள்ளதாக கடல்சார் புலனாய்வு நிறுவனம் கேப்லர் தெரிவித்துள்ளது.
இந்த முன்னேற்றம் உலக வர்த்தகம் மற்றும் எண்ணெய் சந்தையில் மேலும் அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan