உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்த ரஷ்யா
29 பங்குனி 2026 ஞாயிறு 17:38 | பார்வைகள் : 237
உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் சுமி பிராந்தியத்தில் அமைந்துள்ள அந்நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பாக வெளியான அதிகாரப்பூர்வ தகவலில், உக்ரைன் அரசுக்கு சொந்தமான நாஃப்டோகாஸ் குழுமத்தின் எரிசக்தி நிலையங்கள் ரஷ்யாவின் தாக்குதலில் கடுமையாக சேதமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி உள்கட்டமைப்பின் பல்வேறு பகுதிகளில் தீ விபத்துகள் ஏற்பட்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக நிலையத்தின் ஊழியர்களுக்கு காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்குதலை தொடர்ந்து விரைந்து செயல்பட்ட அந்நாட்டின் மீட்பு படையினர் எரிசக்தி நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ரஷ்யாவின் தொடர் தாக்குதலுக்கு மத்தியிலும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை உக்ரைன் சீரமைத்து வருகிறது. இருப்பினும் இந்த சமீபத்திய தாக்குதல் உக்ரைனுக்கு மீண்டும் ஒரு சவாலான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan