ஒவ்வொரு குழந்தைக்கும் 250 யூரோ, வட்டி இல்லா கடன், “ஒருங்கிணைந்த பெற்றோர் விடுப்பு"...: புதிய பரிந்துரைகள்!!
11 மாசி 2026 புதன் 21:18 | பார்வைகள் : 1489
பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பாராளுமன்ற அறிக்கை குடும்பக் கொள்கையில் பெரிய மாற்றங்களை முன்வைக்கிறது. முக்கியமாக, ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம் 250 யூரோக்கள் வழங்கும் “ஒற்றை குடும்பத் தொகையை”, முதல் குழந்தை முதல் 20 வயது வரை, வருமான வரம்பின்றி வழங்க பரிந்துரைக்கிறது.
மேலும், சம்பளத்திற்கு ஏற்ப 12 மாதங்கள் ஊதியத்துடன் “ஒருங்கிணைந்த பெற்றோர் விடுப்பு” அறிமுகப்படுத்தவும், குழந்தை பிறக்கும் போது வீடு வாங்க வட்டி இல்லா கடன் வழங்கவும், குடும்பங்களுக்கு வரிவிலக்கு சலுகைகள் உயர்த்தவும் அறிக்கை முன்மொழிகிறது.
2025 ஆம் ஆண்டு பிறப்பு எண்ணிக்கை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளதால், குடும்பங்களை ஆதரிக்க விரைவான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என அறிக்கை வலியுறுத்துகிறது. இத்துடன், தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.
தாத்தா-பாட்டிகளுக்கும் பராமரிப்பு விடுப்பு வழங்குதல், பாடசாலை நிகழ்வுகளில் பங்கேற்க பெற்றோர் மற்றும் பாட்டி-தாத்தாவுக்கு விடுப்பு அனுமதி, ரயில்களில் குழந்தைகளுக்கான தனி வசதிகள் கட்டாயம் அமைத்தல் போன்ற சமூக மாற்றங்களும் இதில் அடங்கும்.
குழந்தை பெறும் விருப்பம் நாட்டில் இன்னும் உயர்ந்தே இருந்தாலும், பொருளாதார மற்றும் தொழில்சார் தடைகள் அதைத் தடுக்கின்றன என அறிக்கை குறிப்பிடுகிறது; எனவே அரசு மட்டுமின்றி சமூகமே முழுவதும் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற அறிக்கை வலியுறுத்துகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan