Paristamil Navigation Paristamil advert login

பனிச்சறுக்கு வீரர்களுக்கு நேர்ந்த சோகம்!!

பனிச்சறுக்கு வீரர்களுக்கு நேர்ந்த சோகம்!!

8 மாசி 2026 ஞாயிறு 13:35 | பார்வைகள் : 1519


பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த இரு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

பனிச்சரிவில் சிக்கி அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெப்ரவரி 7, நேற்று சனிக்கிழமை இரவு இச்சம்பவம் Saint-Véran (Hautes-Alpes) பனிமலையில் இடம்பெற்றுள்ளது. பனிச்சறுக்கு விளையாட்டில் வீரர்கள் ஈடுபட்டபோது, பிற்பகல் 3 மணி அளவில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதகவும் அதில் குறித்த வீரர்கள் சிக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

3,146 மீற்றர் உயரத்தில் அவர்கள் நின்றிருந்தபோது பனிச்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் 1991 இல் பிறந்தவர் எனவும், இரண்டாமவர் 1997 இல் பிறந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.