Paristamil Navigation Paristamil advert login

தாக்குதல் நடத்தபட்டால் பதிலடி கொடுப்போம் - அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

 தாக்குதல் நடத்தபட்டால் பதிலடி கொடுப்போம் - அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

8 மாசி 2026 ஞாயிறு 08:00 | பார்வைகள் : 916


மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளால் ஈரான் தாக்கப்பட்டால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) எச்சரித்துள்ளார்.

அமெரிக்கப் படைகள் ஈரானைத் தாக்கினால், அதற்குப் பதிலாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்களை ஈரான் குறிவைக்கும் என்றும் இத்தகைய நடவடிக்கை அந்தத் தளங்களை கொண்டுள்ள நாடுகளுக்கு எதிரான தாக்குதலாகக் கருதப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஓமனில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற "நேர்மறையான" மறைமுக அணுசக்திப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஒரு நாள் இடைவெளியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.