ஈரானின் கடல்பகுதியில் சிறைப்பிடிக்கப்பட்ட கப்பல்கள்- வெளிவரும் அதிர்ச்சி தகவல்
7 மாசி 2026 சனி 08:40 | பார்வைகள் : 203
ஈரானின் கடல்பகுதியில் வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களை அந்நாட்டுப் படைகள் சிறைப்பிடித்துள்ளன.
ஈரானின் ஃபார்சி தீவின் அருகில் டீசல் உள்பட சுமார் 10 லட்சம் லிட்டர் எண்ணெய்யை ஏற்றிச் சென்ற 2 வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் வியாழக்கிழமை சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, எண்ணெய் கப்பல்கள் புஷேர் நகரத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும், அந்தக் கப்பல்களில் இருந்த 15 பணியாளர்கள் சட்டத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ளதாகவும், ஈரானின் புரட்சிகர காவல்படையின் அதிகாரி ஜெனரல். ஹெய்தார் ஹோன்ரியன் மொஜாராட் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்தக் கப்பல்கள் எந்த நாட்டுக்குச் சொந்தமானவை எனும் தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
மேலும், அந்தக் கப்பல்கள் எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டன எனும் குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்படவில்லை. முன்னதாக, 16 பணியாளர்களுடன் சென்ற வெளிநாட்டு எண்ணெய் கப்பல் ஒன்றைக் கடந்த டிசம்பர் மாதம் ஈரான் அதிகாரிகள் சிறைப்பிடித்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan