Paristamil Navigation Paristamil advert login

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 2 ஊழல் வழக்குகள் - 10 ஆண்டு சிறை

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 2 ஊழல் வழக்குகள் -  10 ஆண்டு சிறை

2 மாசி 2026 திங்கள் 12:48 | பார்வைகள் : 569


பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 2 ஊழல் வழக்குகளில் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

டாக்காவில் உள்ள பூர்பாச்சல் நியூ டவுன் அரசுத் திட்டத்தின் கீழ் மனைகள் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான ஊழல் வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை ஒடுக்கியபோது ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்பு குற்றங்களுக்காக பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்