Paristamil Navigation Paristamil advert login

நாடு முழுவதும் - மணற்புயல் எச்சரிக்கை!!

நாடு முழுவதும் - மணற்புயல் எச்சரிக்கை!!

3 பங்குனி 2026 செவ்வாய் 17:41 | பார்வைகள் : 467


பிரான்ஸ் முழுவதற்கும் மணற்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று ஆரம்பித்த இந்த மணற்புயல் தாக்கம், இந்த வாரம் முழுவதும் நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 3,  இன்று செவ்வாய்க்கிழமை நாடுமுழுவதும் இந்த மணற்புயல் தாக்கம் ஏற்பட்டிருந்தது. கார்கள் மீது மணற்துகள்கள் படித்து, அதன் நிறமே மாறிப்போயிருந்தது. சஹாராவில் இருந்து பரவும் இந்த புயல், இவ்வாரம் மார்ச் 6, வெள்ளிக்கிழமை வரை பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாளை மறுநாள் வியாழக்கிழமை மிக கடுமையான தாக்கம் ஏற்படும் எனவும்  வீடுகளில் வசிப்பவர்கள் ஜன்னல்களை மூடிவ்சித்துக்கொள்ளவும் எனவும், கார்கள், வாகனக்களின் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சஹாரா மணற்புயலானது ஆண்டுக்கு 200 மில்லியன் தொன் எடையுள்ள மணலை ஐரோப்பாவுக்குள் கொண்டுவருகிறமை குறிப்பிடத்தக்கது.

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026