Paristamil Navigation Paristamil advert login

கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை

கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை

27 மாசி 2026 வெள்ளி 14:25 | பார்வைகள் : 298


கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.

நிலை 4 கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங், கிரேட்டர் நொய்டாவில் உள்ள யாதர்த் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், T20 உலக கிண்ணத்தில் விளையாடி வரும் ரிங்கு சிங், ஜிம்பாப்வே போட்டிக்கு முன்னதாக மருத்துவமனைக்கு சென்று பார்த்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங் உயிரிழந்துள்ளார்.

அவரது மறைவிற்கு முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரிங்குவின் தந்தை கான்சந்த் சிங், மாதம் ரூ.12,000 சம்பளத்திற்கு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியாளராகப் பணியாற்றினார்.

ரிங்குவும் அவரது குடும்பத்தினரும் சிலிண்டர் நிறுவனத்தால், 2 அறைகள் கொண்ட ஒரு குடியிருப்பில் வசித்து வந்தனர்.

தந்தை குறித்து ஒரு நேர்காணலில் பேசிய ரிங்கு சிங், "நான் சிறு வயதில் கிரிக்கெட் விளையாடியதற்காக என் தந்தை என்னை பலமுறை அடித்துள்ளார். ஒருமுறை பள்ளியில் நான் விளையாடிய இறுதிப் போட்டியைப் பார்க்க என் தந்தை வந்திருந்தார். அந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றேன்.

அப்போது எனக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக கிடைத்தது. அதன் பிறகு அவர் என்னை அடிக்கவில்லை. நான் ஏதோ நல்லது செய்கிறேன் என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும்" என கூறினார்.

இல்லத்தரசியான அவரது தாய், ரிங்கு சிங் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வெளியூர் செல்ல அருகில் உள்ள கடைகளில் கடன் வாங்கியே பணம் கொடுப்பார்.

கடினமான பொருளாதார சூழலிலும், தனது மகனை கிரிக்கெட் வீரர் ஆக்க கான்சந்த் சிங் ஆதரவளித்துள்ளார்.

கடந்த ஆண்டு, கவாசாகி நிஞ்ஜா 400 ஸ்போர்ட்ஸ் பைக்கை ரிங்கு சிங் அவரது தந்தை பரிசளித்தார்.

இவருக்கு உத்திரப்பிரதேச மாநிலம், சமாஜ்வாடி கட்சி எம்.பியான பிரியா சரோஜ் என்பவருடன் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஐபிஎல், உலக கிண்ணம் என தொடர் போட்டிகளால் திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.