Paristamil Navigation Paristamil advert login

மார்ச் 1 முதல் மருத்துவமனை கட்டணங்கள் 15–17% உயர்வு!!

மார்ச் 1 முதல் மருத்துவமனை கட்டணங்கள் 15–17% உயர்வு!!

26 மாசி 2026 வியாழன் 14:54 | பார்வைகள் : 516


பரிஸில், மார்ச் 1 முதல் மருத்துவமனை தினசரி கட்டணங்கள்  (forfait journalier hospitalier) மற்றும் அவசர நோயாளர் கட்டணங்கள் (FPU) 15% முதல் 17% வரை உயர்த்தப்பட உள்ளது. அரசு இந்த உயர்வுகள் கூடுதல் சுகாதார காப்பீடுகள் (mutuelles) மூலம் ஏற்கப்படும் என்பதால் நோயாளிகளுக்கு நேரடி சுமை ஏற்படாது என கூறுகிறது. ஆனால் நோயாளர் அமைப்புகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் இதை எதிர்த்து, இந்த செலவுகள் இறுதியில் காப்பீட்டு கட்டண உயர்வாக குடிமக்கள்மீது விழும் என எச்சரித்துள்ளன.

img_69a050673fd29.jpg

இந்த மாற்றம் சமூக பாதுகாப்பிலிருந்து (Sécu) கூடுதல் காப்பீடுகளுக்கு பல கோடி யூரோக்கள் மதிப்பிலான செலவுகளை மாற்றுகிறது. காப்பீட்டு நிறுவனங்கள் 2026 கட்டணங்களில் இதை முன்கூட்டியே கணக்கில் கொள்ளவில்லை என மறுக்கின்றன. மேலும், 2026 ஆம் ஆண்டில் கட்டணங்களை உயர்த்தக் கூடாது என்ற சட்டப் பிரிவு தொடர்பாக சட்ட பரிசீலனையும் நடைபெற்று வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்