Paristamil Navigation Paristamil advert login

மாடுகள் அற்ற விவசாயக்கண்காட்சி! - ஜனாதிபதி மக்ரோன் ஆரம்பித்து வைத்தார்!!

மாடுகள் அற்ற விவசாயக்கண்காட்சி! - ஜனாதிபதி மக்ரோன் ஆரம்பித்து வைத்தார்!!

21 மாசி 2026 சனி 16:48 | பார்வைகள் : 707


பரிஸ் விவசாயக்கண்காட்சி (Salon de l'agriculture a Paris) நிகழ்வு இன்று பெப்ரவரி 21, சனிக்கிழமை1ஹ ஆரம்பமானது.

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று காலை இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். Paris Expo – Porte de Versailles அரங்கில் இன்று ஆரம்பமாகும் இந்த நிகழ்வு - வரும் மார்ச் 1, ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறும்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள பல்வேறு விவசாய மற்றும் கால்நடைகளுக்கான சங்கம் மறுப்பு தெரிவித்திருந்தது. பின்னர் உத்தியோகபூர்வ புகைப்படங்களுக்காக மாடுகளை காண்பிக்க மறுத்து, நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிகழ்வை 'ரிப்பன்' வெட்டி ஆரம்பித்த ஜனாதிபதி மக்ரோன், பின்னர் கண்காட்சிக்கூடத்தின் அனைத்து பகுதிகளையும் சுற்றி பார்த்தார்

வர்த்தக‌ விளம்பரங்கள்