Paristamil Navigation Paristamil advert login

இரண்டரை ஆண்டு நீடித்த PSG-Mbappé வழக்கு முடிவுக்கு வந்தது!!

இரண்டரை ஆண்டு நீடித்த PSG-Mbappé வழக்கு  முடிவுக்கு வந்தது!!

21 மாசி 2026 சனி 22:32 | பார்வைகள் : 2181


Paris Saint-Germain, Kylian Mbappé உடன் ஏற்பட்ட சட்டத் தகராறில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யாமல் இருப்பதாக அறிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஒப்பந்தம் முடிவடைந்த பின் நிலுவையில் இருந்த சம்பளம், போனஸ் மற்றும் ஊதியத்துடன் கூடிய விடுப்புத் தொகைகள் காரணமாக, தொழிலாளர் நீதிமன்றம் PSG-க்கு சுமார் 61 மில்லியன் யூரோக்களை செலுத்த உத்தரவிட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய கிளப்புக்கு ஒரு மாத கால அவகாசம் இருந்தாலும், நீண்டகாலமாக நீடித்து வரும் வழக்கை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அதனைத் தொடர வேண்டாம் என்று PSG தீர்மானித்தது. இனி எதிர்காலம், விளையாட்டு திட்டம் மற்றும் அணியின் ஒருங்கிணைந்த வெற்றி மீது கவனம் செலுத்தப் போவதாக கிளப் தெரிவித்துள்ளது.

மேலும், நீதிமன்றம் Mbappé முன் வைத்த மனஅழுத்த தொல்லை போன்ற பிற குற்றச்சாட்டுகளை நிராகரித்ததாக PSG கூறியுள்ளது. தீர்ப்பின் கீழ் விதிக்கப்பட்ட அனைத்து நிதி நிலுவைகளையும் கிளப் முழுமையாக செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்