Paristamil Navigation Paristamil advert login

இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

19 மாசி 2026 வியாழன் 21:05 | பார்வைகள் : 577


பரிசில் இளம் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார். கனரக வாகனம் ஒன்றுடன் மோதிய அவர், படுகாயமடைந்து பலியானார்.

பரிசின் வடக்குப் பகுதியான 10 ஆம் வட்டாரத்தின் இன்று வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் குறித்த பெண் Barbès-Rochechouart நிலையம் அருகே துவிச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், கனரக வாகனம் ஒன்றுக்குள் எதிர்பாராமல் சிக்கியுள்ளார்.

படுகாயமடைந்த அப்பெண், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் பலியானார்.

20 வயதுடைய அப்பெண் விபத்தில் பலியானமை பெறும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்