Paristamil Navigation Paristamil advert login

ஒன்பது ஆசிரியர்கள் பணிநீக்கம்! - காரணம் என்ன..??!!

ஒன்பது ஆசிரியர்கள் பணிநீக்கம்! - காரணம் என்ன..??!!

17 மாசி 2026 செவ்வாய் 07:37 | பார்வைகள் : 2400


பரிசில் உள்ள மழலையர் பாடசாலைகளில் பயிற்சிவிக்கும் ஒன்பது ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

“உடல் ரீதியான தாக்குதல்கள், பாலியல் ரீதியான வன்முறைகள்” காரணமாக இந்த பணிநீக்கம் இடம்பெற்றதாகவும், அவர்கள் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதில், “பொருத்தமற்ற தொழில்முறை நடத்தை” என அவர்கள் நடந்துகொண்டது தெரியவந்துள்ளது. 

அவர்கள் மீது பெற்றோர்கள் பல நூற்றுக்கணக்கான புகார்கள் அளித்ததன் பின்னர் ரகசிய கமராக்கள் மூலம் அவர்களது நடத்தைகள் கண்காணிக்கப்பட்டது. பரிஸ் 7 ஆம் வட்டாரம், 15 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சில பாடசாலைகளைச் சேர்ந்த குறித்த ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.