கடுங்குளிரிலும் 24 மணி நேர தொடர் ஓட்டம் - கனடியரின் நெகிழ்ச்சி சம்பவம்
12 தை 2026 திங்கள் 18:10 | பார்வைகள் : 553
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த மெறிட் நகரில், கடந்த மாதம் கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் குழந்தைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அந்நகரைச் சேர்ந்த ஒருவர் கடுமையான குளிர் சூழலில் 24 மணி நேர தொடர் ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
மார்க் நெண்டிக் (Mark Nendick) என்பவர், சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த ஓட்டத்தை, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு—துல்லியமாக 24 மணி நேரத்திற்குப் பிறகு—நிறைவு செய்தார்.
இந்த காலகட்டத்தில் அவர் மெறிட் நகரின் ஓட்டப்பாதையை 402 முறை சுற்றி, மொத்தமாக 156 கிலோமீட்டர் தூரம் ஓடியுள்ளார். இடையில் அவர் மிகவும் குறுகிய இடைவெளிகளையே எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகமே ஒன்றாகச் சேர்ந்த விதம் அற்புதமாக இருந்தது,” என ஓட்டத்தை முடித்த பின் நெண்டிக் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் மூலம், கடந்த டிசம்பர் 16 அன்று உயிரிழந்த பாமேலா ஜார்விஸ் (45) என்பவரின் ஆறு குழந்தைகளுக்காக 3,000 டொலர் நிதி திரட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக, அவரது கணவர் கிறிஸ்டோபர் ஜார்விஸ் மீது இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெண்டிக்கின் மனைவி பாமேலா ஜார்விஸை அறிந்தவர் என்றும், தனது குழந்தைகள் ஜார்விஸின் சில குழந்தைகளுடன் பள்ளியில் படித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
“அவர் மிகவும் நல்ல மனம் கொண்டவர். எவருக்கும் உதவ தயாராக இருப்பவர். இப்படியான முடிவை அவர் பெறத் தகுதியற்றவர்,” என நெண்டிக் உருக்கத்துடன் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை 48 வயதை எட்டிய நெண்டிக், ஒரு அல்ட்ரா-எண்ட்யூரன்ஸ் (ultra-endurance) விளையாட்டு வீரர் ஆவார்.
ஜார்விஸின் துயரமான மரணத்திற்கு பின், அவரது குழந்தைகளுக்கு உதவ ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமே இந்த ஓட்டத்திற்கு தூண்டுகோலாக இருந்ததாக அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan