Paristamil Navigation Paristamil advert login

டெல்லி உள்பட வடமாநிலங்களில் கடும் குளிர்: மக்கள் அவதி

டெல்லி உள்பட வடமாநிலங்களில் கடும் குளிர்: மக்கள் அவதி

12 தை 2026 திங்கள் 12:55 | பார்வைகள் : 162


டெல்​லி​யில்  கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.  நேற்று காலை குறைந்​த​பட்ச வெப்​பநிலை 4.2 டிகிரி செல்​சி​யஸாக குறைந்​தது.   டெல்​லி​யில்  நடப்பு குளிர்​காலத்​தில் பதி​வான மிகக் குறைந்த வெப்​பநிலை​ இதுவாகும். டெல்​லியிலும் அதன் சுற்​றுப்​புறப் பகு​தி​களிலும்  மூடு​பனி​யுடன் கூடிய குளிர் அலை வீசுகிறது. இதனால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.  

உத்​தரபிரதேசம், பஞ்​சாப், ஹரி​யானா உட்பட வட மாநிலங்​கள் முழு​வதும் அடுத்த 3 நாட்​களுக்கு கடுமை​யான குளிர் அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இந்த மாநிலங்​களி​லும் டெல்​லியைப் போன்​று, மிகக் குளி​ரான காலைப் பொழுது 4.2 டிகிரி செல்​சி​யஸில் பதி​வாகி உள்​ளது.  

மலைப்பிரதேசங்களான இமாச்சல பிரதேசம் மற்​றும் உத்​த​ராகண்​டிலும் கடுமை​யான குளிர் நில​வு​கிறது. சில இடங்​களில் உறைபனி​யும் காணப்​படு​கிறது. உறைபனி​யுடன் கூடிய கடும் குளிர் காரண​மாக வட மாநிலங்​களின் வி​மானங்​கள் மற்​றும் ரயில் சேவை​களில்​ தொடர்ந்​து தாமதம்​ ஏற்​பட்​டு வரு​கிறது.  வாகன ஓட்டிகள் அதிகாலை வேளைகளில் வாகனங்களில் செல்ல கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். 

வர்த்தக‌ விளம்பரங்கள்