Paristamil Navigation Paristamil advert login

அன்புமணி பாமக கூட்டணி பேசுவது நீதிமன்ற அவமதிப்பு – ராமதாஸ்

அன்புமணி பாமக கூட்டணி பேசுவது நீதிமன்ற அவமதிப்பு – ராமதாஸ்

9 தை 2026 வெள்ளி 06:39 | பார்வைகள் : 165


பாமக என்பது தனி ஒருவர் தொடங்கிய கட்சி. யாரும் உரிமை கொண்டாட முடியாது. நான் ரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி ஓடி ஓடி உழைத்து கட்சியை வளர்த்தேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணி பாமக கூட்டணி பேசுவது நீதிமன்ற அவமதிப்பு. என் தலைமையில் தான் கூட்டணி பேச முடியும். நான் இருக்கும் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பாமக தலைவர் அன்புமணி நேரில் நேற்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

 

🔥 இன்றைய சிறப்பு சலுகை

வர்த்தக‌ விளம்பரங்கள்