பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய நாடாளுமன்ற குழு பரிந்துரை
8 தை 2026 வியாழன் 10:43 | பார்வைகள் : 160
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28-ந்தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந்தேதி காலை 11 மணிக்கு தாக்கல் செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை களில் அரசு அலுவலங்களும், பங்கு சந்தைகளும் மூடப்பட்டிருக்கும். அது மட்டுமின்றி அன்று குரு ரவிதாஸ் ஜெயந்தி தினமாகும். இதனால் இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் ஆகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரிசபை குழு கூட்டத்தில் இன்று ஆலோசிக்கப்பட்டது. பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம், நிதி மந்திரியாக இருந்த காலத்தில் தொடர்ச்சியாக 9 மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த முதல் நிதி மந்திரி என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan