Paristamil Navigation Paristamil advert login

38 மாவட்டங்களுக்கு பனிப்பொழிவு மற்றும் உறைபனி, மழை காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை !!!

38 மாவட்டங்களுக்கு பனிப்பொழிவு மற்றும் உறைபனி, மழை காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை !!!

6 தை 2026 செவ்வாய் 21:26 | பார்வைகள் : 3126


Météo-France, Hauts-de-France மற்றும் Île-de-France மாவட்டங்கள் உட்பட 38 மாவட்டங்களுக்கு பனிப்பொழிவு, உறைபனி காரணமாக பகுதிகளில் செம்மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிடத்தக்க பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. ss

புதன்கிழமை, Île-de-France பகுதியில் காலை 5:30 முதல் இரவு 8 மணி வரை அனைத்து வாகனங்களும் 70 கிமீ/மணிக்கு குறைவாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. 3.5 டன்னுக்கு மேற்பட்ட கனரக வாகனங்களுக்கு முக்கிய சாலைகளில் முந்திச் செல்ல அனுமதிக்கப்படாது;  Hauts-de-France, Aisne, Oise, Nord, Pas-de-Calais மற்றும் Somme பகுதிகளில், பல துறைகளின் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் தேசிய சாலைகளிலும் கனரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்ற வாகனங்களின் வேகம் மணிக்கு 20கிலோமீட்டர் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வானிலை காரணமாக விமானப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்படுகிறது; பரிஸ்-ரோய்சி விமான நிலையத்தில் 40% விமானங்களும், ஓர்லியில் 25% விமானங்களும் ரத்து செய்யப்படுகின்றன. 

Yvelines, Seine-et-Marne,Cher, Eure-et-Loir, Indre, Indre-et-Loire, Loir-et-Cher, Loiret, Pays de la Loire, Loire-Atlantique, Maine-et-Loire, Mayenne, Sarthe மற்றும் Vendée போன்ற இடங்களில் பாடசாலைப் பேருந்துகள் இயங்க மாட்டாது. 

மேலும் உறைபனி காரணமான சாலை விபத்துகளில் ஏற்கனவே குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இல்-து-பிரான்ஸ் பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் பயணத்தை மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்