La Poste மீது புதிய சைபர் தாக்குதல்: ஆன்லைன் சேவைகள் தற்காலிகமாக செயலிழப்பு!!
1 தை 2026 வியாழன் 14:32 | பார்வைகள் : 970
La Poste நிறுவனம் மீண்டும் ஒரு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இந்த தாக்குதலால் laposte.fr மற்றும் La Banque Postale ஆகியவற்றின் ஆன்லைன் சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன.
குறிப்பாக பார்சல் கண்காணிப்பு சேவை தற்போது கிடைக்கவில்லை. இருப்பினும், பார்சல்கள் மற்றும் கடிதங்களின் விநியோகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. La Poste எந்தவொரு தரவு கசிவும் ஏற்படவில்லை என்றும், சேவைகளை விரைவில் மீட்டெடுக்க தொழில்நுட்ப குழுக்கள் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
La Banque Postale வாடிக்கையாளர்கள் ஆன்லைன் கட்டணங்களை செயலியில் உறுதிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்; ஆனால் SMS மூலம் அடையாள உறுதிப்படுத்தல் செய்ய முடிகிறது. இந்த தாக்குதல், கிறிஸ்துமஸ் காலத்தில் ஏற்பட்ட முந்தைய பெரிய சைபர் தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட நிகழ்வாகும்.
கிறிஸ்துமஸிற்கு முந்தைய தாக்குதல் ஒரு “சேவை மறுப்பு” (Denial of Service) தாக்குதலாக இருந்தது, இதற்காக ஒரு ரஷ்ய ஆதரவு ஹேக்கர்கள் குழு பொறுப்பேற்றிருந்தது. La Poste புகார் அளித்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan