Paristamil Navigation Paristamil advert login

அடுத்த நான்கைந்து நாட்களுக்கு சீரற்ற வானிலை!!

அடுத்த நான்கைந்து நாட்களுக்கு சீரற்ற வானிலை!!

29 தை 2026 வியாழன் 18:16 | பார்வைகள் : 879


அடுத்துவரும் நான்கைந்து நாட்களுக்கு பரிஸ், இல்-து-பிரான்ஸ் மாகாணம் முழுவதும் சீரற்ற காலநிலை நிலவும் என Météo France அறிவித்துள்ளது.

நாளை ஜனவரி 30 ஆம் திகதி முதல் பெப்ரவரி 5 ஆம் திகதி வரையான நாட்களில் மிகவும் மேகமூட்டம் காணப்படும் எனவும், 10°C இற்கும் குறைவான வானிலை பதிவாகும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மழைத்தூறல் தொடர்ந்துகொண்டே இருக்கும் எனவும், 50 கி.மீ வேகம் வரை காற்று வீசும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை ஈஃபிள் கோபுரத்தின் உச்சி புகைமூட்டத்துக்குள் மறைந்திருந்ந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. பிற்பகல் 1 மணிக்கு 4°C பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்