Paristamil Navigation Paristamil advert login

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்: எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் வீரவணக்கம்

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்: எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் வீரவணக்கம்

25 தை 2026 ஞாயிறு 06:48 | பார்வைகள் : 236


மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-  

சங்கத்தில் வளர்ந்து,  

சரித்திரங்கள் பல படைத்து,

சீரிளமை கொண்டு விளங்கும்,  

நம் உயிருக்கு நேராம்,  

செந்தமிழர் தாயாம்,  

அன்னைத் தமிழை காக்க  

தன்னுயிர் நீத்த  

மொழிப்போர் தியாகிகளுக்கு  

வீரவணக்கம்!  

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

தியாகிகள் திருவுருவப் படங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் என்று அவர் முழக்கமிட்டார். அவருடன் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.  

இதைத்தொடர்ந்து எழும்பூரில் உள்ள தாளமுத்து - நடராசன் மாளிகை வளாகத்தில் அவர்களது திருவுருவச் சிலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.  

வர்த்தக‌ விளம்பரங்கள்