Paristamil Navigation Paristamil advert login

ட்ரம்பின் Board of Peace குழுவில் இணையும் பாகிஸ்தான்

 ட்ரம்பின் Board of Peace குழுவில் இணையும் பாகிஸ்தான்

22 தை 2026 வியாழன் 05:15 | பார்வைகள் : 1506


அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் உருவாக்கியுள்ள Board of Peace குழுவில் பாகிஸ்தான் இணைவதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த குழுவின் முக்கிய நோக்கம், காசா பகுதியில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதும், உலகளாவிய மோதல்களை குறைப்பதுமாகும். 

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், “காசாவில் நிலையான போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும். அதற்கான கட்டாயமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மேலும், காசா மக்களுக்கு உதவி மற்றும் மறுசீரமைப்பு பணிகள் வலுப்படுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது. 

ட்ரம்பின் அழைப்பின் பேரில், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. 

சில நாடுகள் இந்த முயற்சியை எச்சரிக்கையுடன் அணுகினாலும், இதுவரை 20-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த குழுவில் இணைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கட்டமைப்பின் கீழ் காசா திட்டத்தை ஆதரிப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவு, பாகிஸ்தான்-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதோடு, காசா பிரச்சினையில் புதிய அரசியல் பரிமாணத்தை உருவாக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.