Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உயிரிழந்த நபர்! - விசாரணைகள் ஆரம்பம்!!

பரிஸ் : காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உயிரிழந்த நபர்! - விசாரணைகள் ஆரம்பம்!!

17 தை 2026 சனி 17:04 | பார்வைகள் : 505


காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்த நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரிசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

El Hacen Diarra எனும் 35 வயதுடைய நபர் பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் அவர் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட சில நிமிடங்களில் நிலையத்தில் வைத்து உயிரிழந்தார்.

இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று சனிக்கிழமை மேற்படி கைது சம்பவத்தின் போது பதிவுசெய்யப்பட்ட கண்காணிப்பு கமரா காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, குறித்த நபர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி பயணிக்க முற்பட்டதாகவும், காவல்துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்டபோது அவர் இழுத்து விழுத்தப்பட்டதாக காட்சிகள் பதிவாகியுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்