இலங்கையில் தாயைக்கொன்று மனைவியை கத்தியால் குத்திய நபர் கைது
16 தை 2026 வெள்ளி 09:31 | பார்வைகள் : 2159
தனது தாயைக் கத்தியால் குத்திக் கொன்று மனைவியைக் கடுமையாக காயப்படுத்தியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் புதன்கிழமை (15) மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. சதோசகம, திட்டகல்ல, பெலஸ்ஸவைச் சேர்ந்த மகாகமகே நந்தவதி (78) என்பவரே உயிரிழந்துள்ளார்.
தனது தாயை மார்பில் குத்திக் கொன்ற அவர், பின்னர் தனது வீட்டில் இருந்த தனது மனைவி வோசகா வீரசூரிய (57) என்பவரை கத்தியால் குத்தி கடுமையாக காயப்படுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த பெண், காலி கராப்பிட்டிய தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கத்தியை வைத்திருந்த சந்தேக நபர், அஹங்கம காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார், மேலும் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan