கல்வி தனியார் மயமாகக்கூடாது - பள்ளி மாணவர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி
14 தை 2026 புதன் 07:57 | பார்வைகள் : 172
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்.பி. இன்று நீலகிரி மாவட்டம் வந்துள்ளார். கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அவர் கூடலூர் வந்துள்ளார். கூடலூர் வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ராகுல்காந்தி கூடலூரில் உள்ள புனித தாமஸ் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்று பொங்கல் வைத்தார். அப்போது ராகுல் காந்தி தோடர் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து பாரம்பரிய நடனமாடியும் மகிழ்ந்தார்
இதையடுத்து மாணவர்களிடம் உரையாடுற்ற ராகுல் காந்தி, "கல்வி தனியார்மயமாகக்கூடாது. மாணவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும். ஆண்களைவிட பெண்கள் சிறந்து விளங்குகின்றனர்; ஐ.டி. துறையில் இந்தியா சிறந்து விளங்குகிறது
எனது பாட்டி இந்திரா காந்தியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். ஆண்களைவிட பெண்கள் மிகவும் திறமையானவர்கள், தொலைநோக்கு சிந்தனை கொண்டவர்கள்; பெண்கள் இன்னும் பலதுறைகளில் பங்களிப்பை வழங்க வேண்டும். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஆனால் தற்போது ஆள்பவர்களால் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகிறது" என்று தெரிவித்தார்.
ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு பள்ளி மைதானம் முதல் செயிண்ட் தாமஸ் பள்ளி மைதானம் வரை போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கூடலூர் நிகழ்ச்சி முடிந்ததும் ராகுல்காந்தி எம்.பி., மீண்டும் மைசூர் புறப்பட்டுச் செல்கிறார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan