Paristamil Navigation Paristamil advert login

அனாதைகள் என்றழைத்தால் என் மனது நிரம்பி வழிகிறது வருத்தமிகு...

அனாதைகள் என்றழைத்தால் என் மனது நிரம்பி வழிகிறது வருத்தமிகு...

8 மார்கழி 2025 திங்கள் 05:22 | பார்வைகள் : 258


அனாதைகள் என்றழைத்தால்

என் மனது நிரம்பி வழிகிறது

வருத்தமிகு காட்சிகளளால் !

ஆழ் கடல் முழுதும் உள்ள

சோக அலைகள் எழுகிறது !

ஆதரவற்றவர் என உச்சரித்தால்

ஈர நெஞ்சங்கள் இரு கரம் நீட்டிடுக !

 

நம்பி வந்தவருக்கு உதவிடுவார்

என்றெண்ணி இருந்த எவரும்

யாசித்து காத்திருந்த பலரை

யோசிக்க வைக்குது இந்நிலை !

 

வாழும் மனிதர்களை

வையகமே நினைத்திடு !

வறுமையின் சிக்கி தவிப்போரை

ஆதரவின்றி அகிலத்தில் வாழ்வோரை

நல் உள்ளங்களே இயன்றதை செய்திடுக !

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்