Paristamil Navigation Paristamil advert login

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - இலங்கையர்களை விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - இலங்கையர்களை விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை

27 கார்த்திகை 2025 வியாழன் 09:07 | பார்வைகள் : 3867


இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, கடலோரப் பகுதிகளிலும் அதன் அருகிலும் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வாளிமண்லவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று வாளிமண்லவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.